இரு முக கவசங்களை பொதுமக்கள் அணியுமாறு கோரிக்கை!

நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொவிட் தொற்றினால், பொதுமக்கள் அனைவரும் இரு முகக்கவசங்களை அணியுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே அறிவித்துள்ளார்.

வீட்டில் இருந்து வெளியேறுகின்ற போது பேஸ் ஷீல்ட் கவசம் ஒன்றினை அணிந்து கொள்வதும் மிக அவசியமானது எனவும் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

அத்தோடு, நாட்டில் கிடைக்கின்ற எந்த தடுப்பூசியையேனும் அருகில் உள்ள தடுப்பூசி நிலையத்திற்கு சென்று விரைவாக பெற்று கொள்ளுமாறும் பொதுமக்களிடம் இராஜாங்க அமைச்சர் கேட்டுகொண்டுள்ளார்.

Exit mobile version