இலங்கையாழ்ப்பாணம்

கணவன் பலருடன் தொடர்பு! மனமுடைந்த மனைவி தற்கொலை!

கணவனின் காம இச்சையால் மனமுடைந்த இரண்டு பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒருபெண் தனதுவாழ்வில்; பலதை இழந்து சில மகிழ்ச்சிகளை மட்டுமே பெறுகிறாள். பெண்கள் என்றுமே யாரோ ஒருவரின் கீழ் அடிமையாகத் தான் இருக்கிறனர்.

அன்பில் அடிமையாகிறோம் அல்லது கட்டாயத்தின் பெயரில் அடிமையாகின்றோம்.

திருமணம் என்றவிடயத்தில் பாதிக்கப்படுவது பெண்கள் தான் இதைத் தாண்டி தம் கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக நினைத்து தம் பிள்ளைகளை தாம் தான் கொல்கின்றோம் என்பதைஅறிந்து கொள்கின்றனர் இல்லை பெற்றவர்கள்.

சிரித்தமுகமும் பிறருக்குஅன்பைமட்டும் அள்ளித் தருபவள் இன்று எம்முடன் இல்லைஅவளது இறப்புக்குக் காரணம் என்ன? கொலையா? தற்கொலையா? கோடிக்கணக்கில் வரதட்சணை கொடுத்து இருவரது மனமும் ஒன்றித்து திருமணபந்தத்தில் இணைந்து இரண்டு பிள்ளைகளுக்குத் தாய் தன் பிள்ளைகளைக் கூட எண்ணாமல் தனதுஉயிரைப் பணயம் வைக்கக் காரணம் என்ன?

அழகோடு இணைந்த அறிவுக்கு மேலாக அவளது இரக்கமான மனதைவிட எதற்க்கு ஆசைப்பட்டான் அந்த கணவன்.

கோடிக்கனக்கான வரதட்சனை, இருக்கின்ற காரை விட மேலதிகமாக புதுக் கார் தேவையென அவளைக் கட்டாயப்படுத்துவதும் போதாதெனதம் பிள்ளைக்கு கொடுத்த வரதட்சனைகளை கணவனின் சகோதரிக்கு கொடுத்திருக்கின்றான். இவ் வரதட்சனைக்கு அக் கயவனின் பெற்றவர்களும் உடந்தையே….

முக்கியமாக தனது கணவன் முகப்புத்தகத்தில் பலபெண்களுடன் உரையாடுவது மட்டுமன்றி அப் பெண்களுடன் தகாதஉறவினைமேற் கொண்டதை அறிந்த அவ் அபலப் பெண்அதை எடுத்துக் கூறி மன்னிப்பை வழங்கியிருந்த போதிலும் அவனது லீலைகள் அடங்கவில்லை.

தொடர்ந்தும் புதிய புதிய பெயர்களில் பேக் ஜ.டி தயாரித்து உல்லாசமாக இருந்தது மட்டுமன்றி அக் கயவன் அப் பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளான்.

தன்னை விட மேலதிகமாகப் படிக்கக் கூடதென்று கட்டளையும் விதித்திருந்தான் அவளது கணவனான நவரட்னம் புஸ்பகுமார்.

யாழ் இந்துக்கல்லூரியில் கல்விகற்று தற்போது கொடிகாமம் ஸ்ரேசன் மாஸ்ரராக வேலை செய்கின்றான்.

நாள் தோறும் அவர்களது பிரச்சனை அதிகரிக்க ஒரு குடும்பவாழ்விற்கு பிரிவு உகந்ததல்லா எனக் கூறி அவர்களது ஒவ்வொரு சண்டையிலும் பெற்றோர் சேர்த்து வைத்தனர்.

சட்டத்தை (நான்குவருடம்) கற்றுக் கொண்டிருப்பவள் தற்கொலையை செய்ய எண்ணியிருக்க சாத்தியமில்லை மீறி அவளது இறப்புக்கு காரணம் யார்?

அவளது இறப்புக்குக் காரணம் தற்கொலையல்ல என்பது மட்டும் திடாத்திரமான உண்மை…..

ஒன்றை மட்டும் அறிந்து கொள்ளுங்கள் உங்கள் சுய கௌரவத்திற்காக உங்கள் பிள்ளைகளை அரச உத்தியோகம்தானே என என்னி கயவர்களிடம் உங்கள் பிள்ளையை இழக்காதீர்கள்.

இழந்தது உயிர் இறக்கும் போதுஅவளது மனம் அடைந்த வலியை யாரும் அறிந்திருக்கப் போவதில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button