ஊரடங்கு உத்தரவை மீறிய பலர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 577 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 62 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த 2020 ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியதாக 63,908 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனைகள் தொடர்ந்தும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version