அம்பாறையில் இரு கைக்குண்டுகளை மீட்டு வெடிக்கவைத்த பொலிசார்!

விடுதலைப் புலிகளின் காலத்தில் கட்டுப்பாட்டிலிருந்த அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் உள்ள விவசாய காணி ஒன்றில் கைவிடப்பட்டநிலையில் இருந்த இரண்டு கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டு அவ்விடத்திலேயே வெடிக்க வைத்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைக்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பை ஒன்றில் போட்டு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட 2 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டனர்.

இவ்வாறு மீட்டபட்ட கைக்குண்டில் ஒன்று இந்திய தயாரிப்பும் மற்றையது இலங்கை தயாரிப்புகள் எனவும் இவற்றை நீதிமன்ற அனுமதி பெற்று அவ்விடத்திலே வெடிக்க வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version