பாடசாலை கணினிகள் கொள்ளை, மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாலய கணினி அறைக் கதவினை உடைத்து அங்கே இருந்த மூன்று கணினிகளும் அதனுடைய பாகங்களும் நேற்று(1) புதன்கிழமை இரவு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை பூட்டபட்டிருந்த நிலையில் நேற்று இரவு பாடசாலை கணனி பிரிவு அறையின் கதவினை உடைத்து அங்கே இருந்த 3 கணினிகள், 1 மவூஸ், 1 கீபோட் என்பன திருடப்பட்டுள்ளன.

இது குறித்து பாடசாலை அதிபர் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற தடயவியல் பொலிசார் கொள்ளையிடப்பட்ட பகுதியைப் பார்வையிட்டதோடு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version