பொது போக்குவரத்துக்கள் மீள ஆரம்பம்! இராஜாங்க அமைச்சர் கருத்து!

நாட்டில் மீளவும் பொது போக்குவரத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்ட விடயங்களாவன,

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

அத்தோடு மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடைகள் நீடிக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு உள்ளே பொது போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும்.

எவ்வாறு இருப்பினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டால் பொதுபோக்குவரத்து சேவைகள் இடம்பெறமாட்டது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

திருமணம் செய்யாமல் குழந்தை பிரசவித்த பெண்! பெற்றோர் செய்த செயல்!

Exit mobile version