ஜனாதிபதியின் அதிரடி உத்தரவால் உடனடியாக அமுலாகியது அவசர சட்டம்!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இட்ட அதிரடி உத்தரவிற்கு அமைய அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசரசட்ட விதிமுறைகள் இன்று (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 2வது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய, இச்சட்டத்தினை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தீர்மானம் எடுத்துள்ளார்.

அதன் பிரகாரன் நெல், அரிசி மற்றும் சீனி போன்ற அத்தியாவசியமான பொருட்களை பதுக்கி வைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற செயற்பாட்டின் ஊடாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாகும் சந்தை முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இந்த அவசர சட்ட விதிமுறைகள் இன்றிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, அரசினால் நிர்ணயம் செய்யப்பட்ட விலை அல்லது சுங்கம் இறக்குமதி செய்த விலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, மேற்படி உணவுபொருட்களை கொள்வனவுசெய்து மக்களுக்கு நியாயமான விலையில் வழங்க அங்கீகாரம்பெற்ற அதிகாரிகள் நடவடிக்கையினை எடுக்கவும், அரச வங்கிகளின் ஊடாக மொத்த கொள்வனவிற்காக வழங்கப்பட்ட கடனை, கடன் பெற்றவரிடம் அறவீடு செய்யகூடியவாறும் இதனை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகபிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

30ம் திகதியின் பின்னரும் நாடு முடக்கப்படுகிறதா? சற்று முன் கிடைத்த செய்தி!

Exit mobile version