நாட்டில் உள்ள தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளமாக 16000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு குறைந்த ஒரு நாள் சம்பளமாக 640 ரூபாய் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பானது கடந்த 16ம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியான வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகதொழில் ஆணையாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்தார்.