ஆடை தொழிற்சாலையில் வேலை என விபச்சாரம் செய்துவந்த நான்கு பெண்கள்!

ஆடை தொழிற்சாலையில் வேலை செய்வதாக வீட்டாரிடம் தெரிவித்து விட்டு விபச்சாரம் செய்து வந்த 20 வயதிற்கும் 30வயதிற்கும் இடைப்பட்ட நான்கு பெண்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

தற்போது நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ள நிலையில் மசாஜ் நிலையங்கள் எனும் போர்வைக்குள் விபசாரம் இடம்பெற்று வந்துள்ளது.

ராஜகிரிய குரே மாவத்தை மற்றும் எத்துல்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இரு மாசாஜ் நிலையங்கள் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டது.

இந்த மசாஜ் நிலையங்களில் விபசாரம் செய்ததாக நால்வர் கைது செய்யப்பட்டனர். அத்தோடு இவற்றை நடாத்தி வந்த குற்றச்சாட்டில் மேலும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட பெண்கள், சிலாபம், கெக்கிராவ, அங்குணகொலபெலஸ்ஸ, நெலுவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கொழும்பில் உள்ள ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதாக தமது வீட்டாரிடம் கூறிவிட்டு, இப்பெண்கள் மசாஜ் நிலையங்களில் விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்தோடு தொலைபேசி “அப்” (செயலி) ஊடாக, இவர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கணவனின் அனுமதியோடு மனைவியை பலாத்காரம் செய்த சாமியார்!

13 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 12வயது தம்பி!

பேயினை ஓட்டுவதாக மாமியையும், மருமகளையும் பலாத்காரம் செய்த பூசாரி!

Exit mobile version