முதியோர் இல்லத்தில் 44 பேருக்கு கொரோனா!

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லமொன்றில் நாற்பத்தி நான்கு முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வயோதிபர் இல்லத்தில் 298 முதியவர்கள் உள்ள நிலையில் அவர்களில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஏனைய வயோதிகர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனையில் நாற்பத்தி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான முதியவர்களில் 20பேர் அனுராதபுர மாவட்ட வைத்திய சாலையிலும் ஏனை 24பேர் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டது!

Exit mobile version