இந்தியா

இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல – அவர்களுக்கு துணையாக நாம் இருக்கிறோம்!

இலங்கை தமிழர்கள் அனாதைகள் இல்லை என்றும் அவர்களுக்காக துணையாக நாம் இருக்கிறோம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாத்தின் பெயர் இனி மறுவாழ்வு முகாமென அழைக்கப்படுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை தமிழருக்கு துணையாக நாம் இருக்கின்றோம் என்பதை உணர்த்துவதற்காக இவ்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தமிழக சட்ட பேரவையில் இடம்பெற்ற விவாதத்தின் போது அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர் நலன்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்புக்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button