நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கை தமிழருக்கு 115 வருட சிறை!

இலங்கை தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்று 115 வருட சிறை தண்டனை வழங்கியுள்ளது. அத்தோடு 125மில்லியன் டொலர் அபராதமும் விதித்தள்ளது.

கொழும்பு நகரசபையின் மேயராக இருந்த புலோலியூர் கணேசலிங்கத்தின் மருமகனான சிவேந்திரன் வெற்றிவேற்பிள்ளை என்பவருக்கே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆறு பெரும்புள்ளிகள் இணைந்து ஆரம்பித்த நிறுவனத்தின் ஊடாக அப்பாவி மக்கள் பலரது நிதியினை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இக்குற்றச்சாட்டின் பேரில் சிவேந்திரன் வெற்றிவேற்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

இவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதோடு, தனஹ்டு தண்டனையை குறைக்க வேண்டும் என நீதிமன்றில்  கோரிக்கை விடுத்திருந்தார்.

இவரை போலவே, இவரோடு கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நபர் ஒருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

ஓய்வூதிய நிதி, முதலீட்டாளர்கள் நிதி போன்ற நம்பிக்கையின்; அடிப்படையில் வைப்பிடப்பட்ட அப்பாவி மக்களின் பல கோடி டொலர்களில் மோசடி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர்கள், பல்வேறு நாடுகளில் பல நிறுவனங்களை ஆரம்பித்து, அவற்றின் ஊடாக பலரது பணத்தை ஏப்பமிட்டிருக்கிறார்கள் என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

இவர்களது இந்தக்குற்றங்கள் 2014 – 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவனும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரமுகரும் 1994 – 96 காலப்பகுதியில் கொழும்பு மேயராகவும் பதவிவகித்த கனகசபாபதி கணேசலிங்கத்தின் ஒரே மகள் மேனகாவை திருமணம் செய்தவர் சிவேந்திரன் வெற்றிவேற்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று ஏற்பட்டால் ஏற்படும் அறிகுறிகள்!

Exit mobile version