ஊரடங்கால் அரசிற்கு தினமும் எவ்வளவு நட்டம் தெரியுமா?

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 1500 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகவே நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைக்காது முடிந்தளவு குறுகிய காலத்தில் திறக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சூழல் ஏற்படும்போது நாட்டினது வளர்ச்சி வீதம் மற்றும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி என்பன பாதிக்கப்படும்.

ஆகவே நாட்டினை மூடுவதால் ஏற்படும் இழப்புகளை குறைக்க நம் நாட்டை விரைவிலேயே இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version