கொரோனாவால் மங்கள சமரவீர காலமானார்!

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்த மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசில் நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர தனது 65வது வயதில் காலமானார்.

முன்னால் நீதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று தொடர்பான நிமோனியா ஏற்பட்டமையினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையிலேயே அவர் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

பயனுள்ள தகவல்

Exit mobile version