இலங்கைமட்டக்களப்பு

16 வயது சிறுமியை காணவில்லை!

ஆடைதைப்பதற்காக சென்ற 16 வயது சிறுமியான தவராசா சசீக்கா என்பவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

உறவினர் ஒருவரது வீட்டுக்கு ஆடைதைப்பதற்கென சென்ற நிலையில் காணாமல் போயுள்ளாதாக சிறுமியின் அம்மம்மா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

புதுக்குடியிருப்பு புளியடி வீதியைச் சோந்தவர் தவராசா சசீக்கா. இவர் 16வயதுடையவர்.

சிறுமியின் தந்தை இல்லாத நிலையில் தாயார் வேறு திருமணம் முடித்து சென்றுவிட்டார்.

மேற்படி சிறுமியும் அவரது அக்காவும் அம்மம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை சிறுமியின் அக்கா வேலைக்கு சென்ற நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் உறவினரது வீட்டில் ஆடை தைப்பதற்கு செல்வதாக அம்மம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் இரவாகியும் சிறுமி வீடு திரும்பாததை அடுத்து அவரை தேடியபோதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை அடுத்து சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் அம்மம்மா முறைப்பாடு செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button