ஊரடங்கு நேரத்திலும் விமான நிலையம் செயல்படும் ஜனாதிபதி அறிவிப்பு!

தற்பொழுது நாட்டில் உட்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியிலும் விமான நிலையங்கள் தமது செயற்பாட்டை தொடருமாறு ஜனாதிபதி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாட்டில் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தாலும் விமான நிலையங்களில் செயற்பாட்டிற்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் விமான நிலையங்களுக்கு செல்ல தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் படி ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version