புளியங்குளம் – கல்மடு கிராமம் முடக்கப்பட்டது! 13பேருக்கு தொற்று உறுதி!

வவுனியா வடக்கு புளியங்குளம், கல்மடு கிராமத்தில் நடாத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கல்மடு கிராமத்தில் பலருக்குக் காய்ச்சல் இருப்பதாக சுகாதார பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை நடாத்தப்பட்டது.

இதன்போது குறித்த கிராமத்தில் 35 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 19 குடும்பங்களுக்கு எழுமாற்றாக நடாத்தப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கல்மடு கிராமம் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளதோடு குறித்த கிராமத்த்தின் நுழைவாயில் பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version