விசேட அறிவிப்பிற்கு தயாராகும் ஜனாதிபதி!

நாட்டினை முடக்குவது தொடர்பில் அரசாங்கம் தீவிர ஆலோசனையினை  நடத்தி வருகிறது.

அதன் பிரகாரம் நாளைய தினம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வரை நாட்டினை எவ்வளவு காலத்திற்கு முடக்கி வைப்பது குறித்த தீர்மானத்தை நாளைய தினம் ஜனாதிபதி அறிவிப்பார் எனத் தெரியவருகிறது.

இன்றையதினத்தின் தற்போதுவரை மாத்திரம் 3700இற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version