அரச அறிவிப்பிற்கு முன்பே தானாக முடங்கியது நாடு!

கடுமையான வேகத்தில் இலங்கையில் கொரோனா தொற்று பரவிவருகின்ற நிலையில் பல தரப்புக்களும் நாட்டினை முடக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் அரசாங்கம் நாட்டை முடக்குவதற்கான அறிவிப்புகளை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் முழு நாட்டினை முடக்குவதற்கு வர்த்தக சங்கங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வர்த்தக சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அமைய பல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதேவேளை நாட்டினை முடக்குவதற்கு நாளை இரவுக்குள் அரசாங்கம் முடிவு எடுக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.

Exit mobile version