இலங்கை

சஹ்ரான் குழு பற்றிய தகவல் வழங்கியவருக்கு பணப்பரிசு!

சஹ்ரான் குழுவினரால் மாவனல்லை பகுதியில் அமைந்துள்ள புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை குறித்து தகவலை பொலிஸாருக்கு வழங்கிய மொஹமட் தஸ்லினுக்கு இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர பணப்பரிசினை வழங்கி வைத்துள்ளார்.

குறித்த தகவலை வழங்கியதால் ஆத்திரமடைந்த சஹ்ரான் குழு மொஹமட் தஸ்லின் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டது.

உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லினுக்கு இலங்கை பொலிஸாரினால் ரூபா 25 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் கொடுத்ததற்காக சஹ்ரான் குழுவால் கொடூரமாக தாக்கப்பட்ட தஸ்லிம் இப்போது முடக்கப்பட்டுள்ளார்.

தகவல் அளித்ததற்காக இந்த பணம் சன்மானமாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் காசோலையாக தஸ்லீனுக்கு வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button