இலங்கைக்கு 6150 கோடி நிதிஉதவி செய்தது சீனா!!

சுமார் 6150 கோடியினை சீனா அபிவிருத்த்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளது.

சீனா அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கைக்கும் இடையே சுமார் 2 பில்லியன் சைனிஸ் யுவான் நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடபட்டுள்ளது.

இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் சுமார் 61.5 பில்லியன் ஆகுமென இலங்கைக்கான சீனதூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த நிதியுதவி வழங்கப்பட்டதாக சீனதூதரகத்தின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிதியானது இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்தநிதி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version