இலங்கை

ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு – கல்வி அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையினை கலந்துரையாடலின் ஊடக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கல்விஅமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

“கல்வி அமைச்சு போன்று ஒவ்வொரு அமைச்சின் பணியும் கடினமாகும். சகோதர அமைச்சர்கள் மற்றும் ஜனாதியுடன் இணைந்து இந்த சவாலினையும் தேசிய பணியையும் நிறைவேற்றுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளோம்.

நமது பிள்ளைகள்தான் இந்நாட்டு எதிர்காலம். அதை ஆழமாக புரிந்து கொண்டு செயற்பட நாம் தொடர்ந்து பணியாற்றுவோம். கலந்துரையாடல்கள் மூலம் ​​ஆசிரியர் பிரச்சினையை நாங்கள் கையாள்வோம் என அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button