மனைவி பாடசாலை காதலலுடன் கள்ள தொடர்பு! மூன்று உயிர்கள் போனது!

பாடசாலை காதலன் குடும்பப் பெண்ணையும், அவரது 10 வயது மகனையும் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் கல்கமுவ, மஹா நன்னேரியா பகுதியின் பிறப்பகுளத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் கடற்படை உத்தியோகத்தரது மனைவியான 28வயதுடைய இந்திகா சாந்தி, அவரது 10 வயது மகன், .பாடசாலை காதலனான 28வயதுடைய துஷாரகுமார ஆகியோரது சடலங்கள் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெரியவருவதாவது,

சில மாதங்களுக்கு முன்னர் கணவன் மற்றும் இரு குழந்தைகளுடன் மகாநன்னேரிய பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு வாடகைக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

தன்னுடைய 18வது வயதில் இந்திகா சாந்தி கடற்படை உத்தியோகத்தரை திருமணம் முடித்திருந்தார். கடற்படை சிப்பாய் வெலிசர முகாமில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

இந்திகா பாடசாலையில் கல்வி கற்றபோது துஷார குமார என்பவரை காதலித்து வந்துள்ளார். எனினும் இந்த காதல், திருமணத்தில் முடியவில்லை.

இந்நிலையில் இந்திகா வேறு ஒருவரை திருமணம் முடித்து, இரு பிள்ளைகளிற்கு தாயாக இருந்த போதும் கூட, பாடசாலை காதலுடன் தொடர்பை பேணிவந்துள்ளார். கணவரான கடற்படை சிப்பாய் வேலைக்கு சென்ற பின்னர், இருவரும் சந்தித்து உறவு வைத்து வந்துள்ளனர்.

இது, கணவனிற்கு தெரியவந்ததை அடுத்து குடும்பத்திற்குள் பிரச்சனையாகி இவ்விவகாரம் கல்கமுவ பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில், உறக்கத்திலிருந்து எழுந்த இந்திகாவின் 5 வயது மகன், தனது தாயும் சகோதரனும் அசையாமல் படுத்திருப்பதை பார்த்து பக்கத்து வீட்டு பெண்ணிற்கு சொல்லியுள்ளார்.

இதனை அடுத்து பக்கத்து வீட்டு பெண் இந்திகாவின் தொலைபேசிக்கு அழைப்பினை எடுத்தபோது அவர் பதிலளிக்காமையால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்படது.

பொலிசார் வீட்டை சோதனையிட்டதில் மூவரது சடலங்கள் மீட்கப்பட்டது.

தாயும், மகனும் கழுத்து நெரிக்கப்பட்டு, தலையில் அடிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் பாடசாலை காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவ இடத்தில், பாடசாலை காதலனது தொலைபேசியும், தாயாரை கவனித்துக் கொள்ளும்படி தனது சகோதரனுக்கு அவரால் எழுதப்பட்ட சிறிய குறிப்பும் காணப்பட்டது.

சந்தேகநபர் இந்திக்காவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து அவரையும் குழந்தையையும் 7ம் திகதி அதிகாலை 1 மணியளவில் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

பாதிரியாரால் கர்ப்பமாகிய 15 வயது சிறுமி! தற்போது எடுத்த முடிவு!

Exit mobile version