பொலிஸ் ஊடக பேச்சாளராக நிஹால் தல்தூவ நியமிக்கப்பட்டார்!

பொலிஸ் ஊடகபேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொலிஸ்மா அதிபர் C.T. விக்ரமரத்னவினால் புதிய பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிஹால் தல்தூவ இதற்கு முன்னர் பயங்கரவாத விசாரணைபிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக பணிபுரிந்திருந்தார்.

இந்நிலையில் ஊடக பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டு வந்த நிஹால் தல்தூவ, இன்று தொடக்கம் பொலிஸ் ஊடக பேச்சாளராக செயற்படவுள்ளார்.

Exit mobile version