இலங்கை

பதிவு திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

நாட்டில் மிகவேகமாக பரவும் தொற்றுநிலையினால் திருமண வைபவங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமணசெய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் பதிவு திருமணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமென இலங்கை காவல்துறை பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

பதிவுதிருமணத்தின் போது திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர், பெற்றோர், இரண்டு சாட்சிகள் மற்றும் திருமணப் பதிவாளர் ஆகியோருடன் மாத்திரமே பங்குபற்றவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

மறுஅறிவித்தல் வரும் வரை இலங்கையில் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை தினசரி தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களை கண்டறிய காவல்துறையில் சிறப்பு ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் மேலும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button