திருமணம் செய்யவும் தடை!

நாளை மறுதினம் செவ்வாய்கிழமை 17ம் திகதி நள்ளிரவு தொடக்கம் வீடுகளிலும் மண்டபங்களிலும் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறித்துள்ளார்.

அத்தோடு, இன்று நள்ளிரவு தொடக்கம் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும்  அவர் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும்  மற்றுமொரு நடவடிக்கையாக இத்தீர்மானங்கள்  மேற்கொள்ளபட்டுள்ளன.

உணவகங்களில் ஒரே நேரத்தில் அதன் கொள்ளளவின், 50 வீதமானோரை விட அதிகமானோர் ஒன்றுகூட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் நடமாடுவதனை முடிந்தளவு தவிர்க்குமாறும் நாட்டு மக்களிடம் அரசாங்கம் கோருவதாக இராணுவதளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version