வாவியில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி!

வாவியில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் மொனராகலை  புத்தல பகுதியில் பதிவாகியுள்ளது.

இதில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் மொனராகலையை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 20 வயதிற்கு குறைந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (14) சனிக்கிழமை மாலை ஆற்றில் குளிக்கசென்ற போது இவர்கள் மூவரும் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில், மூவரது சடலங்களும் இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளது.

Exit mobile version