இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியம் செல்வோருக்கு முக்கிய அறிவித்தல்!

இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலைக்காக செல்லும் பணியாளர்களுக்கு இன்றுமுதல் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து Rapid PCR பரிசோதனை நடாத்தப்படுகிறது.

அரபு நாட்டிற்கு செல்வோர் 4மணித்தியாலத்திற்கு முன்னர் இப் பரிசோதனைகளுக்காக விமான பயணத்திற்கு 04 மணித்தியாலத்திற்கு  முன் விமான நிலையத்திற்கு வரவேண்டுமென வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுகாதார பிரிவினரின் தீர்மானத்தின் பிரகாரம், அந்த நாட்டிற்குல் பிரவேசிக்கும் அனைவரும் கொரோனா பரிசோதனைகளை நடாத்தி இருக்கவேண்டும்.

அதன்பிரகாரம், அங்கு செல்வோருக்காக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் விமான நிலையத்தினுள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button