தடுப்பூசி அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது! பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு!

அடுத்துவரும் (செப்டம்பர்) மாதம் 15ம் திகதி தொடக்கம் பொது இடங்களில் நடமாடும்போது, இரு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டதை உறுதிப்படுத்தும் அட்டையினை வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

30 வயதிற்கு அதிகமானோருக்கு இன்று கொழும்பின் – கொட்டாஞ்சேனை, முகத்துவாரம் பகுதிகளில் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ராணுவத்தால் முன்னெடுக்கப்படும் 24 மணிநேர தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version