தாய் இழந்த சோகத்தில் 15வயது சிறுமி தற்கொலை!

சில மாதங்களுக்கு முன்னர் தனது தாய் உயிரிழந்த சோகத்தில் 15வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டதிற்குட்பட்ட சில்லிக்குடி ஆறு காஞ்சிரங்குடா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் உயிரிழந்தவர் பாக்கியராசா மாலினி எனும் 15 வயதுடைய சிறுமி எனவும் இவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைசெய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த சிறுமியின் தாயார் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நான் எனது தாயை இழந்தமையால் நானும் தற்கொலை செய்துக்கொள்ளபோவதாக நீண்டநாட்களாக கூறிவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதோடு, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் நடாத்தி வருகின்றனர்.

Exit mobile version