இலங்கை

முழுதாக முடக்கபடுகிறதா இலங்கை? சற்றுமுன் ராஜாங்க அமைச்சர் தகவல்!

இலங்கையினை முழுமையாக முடக்குவது தொடர்பாக எவ்வித தீர்மானமும் எடுகப்படவில்லை என என இராஜாங்க அமைச்சர் சன்னஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொரோனா இலங்கையில் தீவிரம் அடைந்து வருகிற நிலையில் நாட்டினை மீளவும் முடக்குவது குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கொரோனா பரவலை தடுக்கும் செயலணி உட்பட மேலும் சிலதரப்பினருடன் ஜனாதிபதி இன்று சிறப்பு சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்.

குறித்த சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகங்களில் நாடு முழுதாக முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் இது குறித்த முக்கிய தீர்மானம் சொற்ப நேரத்தில் வெளிவர இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் சன்னஜயசுமனவிட கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். எனினும் நாட்டின் கட்டுப்பாடுகளை சற்று கடுமையாக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button