இலங்கை

மருத்துவர்களை ஆட்டிபடைக்கும் கொரோனா!

பதுளையில் மூன்று மருத்துவர்கள் மற்றும் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவின் பிரதான மருத்துவர் பாலித ராஜபக்ச கூறியுள்ளார்.

இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியவர்கள் 3 மருத்துவர்கள், 6 தாதிகள், 7 கனிஷ்ட ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.

இன்று நோயாளிகளுக்கு நடாத்தப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் 27 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

பதுளை வைத்தியசாலையில் 116 கொரோனா தொற்றாளர்கள் 5 விடுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அதிகளவான நோயாளிகள் இருக்கலாம் என பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button