இலங்கைவவுனியா

வீட்டில் இருந்த மனைவி மற்றும் இரு பிள்ளைகளை காணவில்லை!

வீட்டில் இருந்த மனைவியையும், இரு பிள்ளைகளையும் காணவில்லை.

இவ்வாறு காணமல் போனவர்கள் வவுனியா – முதலாம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியினை சேர்ந்த சற்குணசிங்கம் தமிழினி (வயது 32) மற்றும் டனிஸ்கா (வயது 5), கனிஸ்கா (வயது 4) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை(2021.08.10) அன்று கணவர் காலையில் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது அவர்கள் வீட்டில் இருக்கவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போன குறித்த பெண் மற்றும் பிள்ளைகள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகே உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0777111103, 0775945839 எனும் தொலைபேசி இலக்களுக்கோ தகவல் வழங்குமாறு வவுனியா பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button