மட்டக்களப்பில் தங்கையை துஷ்பிரயோகம் செய்த அண்ணன்!

மட்டக்களப்பில் சிறிய தாயாரின் 14 வயது மகளான தங்கையை கூட்டிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞனையும் இளைஞனுக்கு உதவிய அவனது அம்மம்மாவையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் குறித்த இளைஞனின் தந்தை யார் இரு பெண்களை திருமணம் முடித்த நிலையில் இளைஞனின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றமையையடுத்து இளைஞன் அவனது அம்மம் மாவுடன் வாழ்ந்து வருகின்றான்.

இந்த நிலையில் தந்தையார் இரண்டாவதாக திருமணம் முடித்த சிறிய தாயாரின் 14 வருடமும் 6 மாதங்களை கொண்ட தங்கையான சிறுமியை அவளது வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு சென்று தனது அம்மம்மா வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த இளைஞனையும் அவனது அம்மம்மாவையும் கைது செய்தனர்.

சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Exit mobile version