இலங்கைமலையகம்

பிறந்த ஆண் குழந்தை கொரோனாவால் சாவு!

மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவிலுள்ள காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த சிசு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளது.

பிரசவத்துக்காக அப்பெண், டிக்கோயா – கிளங்கன் மகப்பேற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர், அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை
யில் கொரோனாத் தொற்று உறுதியானது.

பெண்ணின் கணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவ்விருவரும் ஒரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அப்பெண், ஆண் சிசுவொன்றைப் பிரசவித்துள்ளார்.

அச்சிசு இறந்துவிட்டது. சிசுவுக்கு மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதார அதிகாரி நரேந்திர குமார் தெரிவித் தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button