EPDP Newsயாழ்ப்பாணம்

போக்குவரத்து சங்க நிர்வாகிகள் அமைச்சர் டக்ளசுடன் சந்திப்பு!

வடக்கு மாகாண தனியார் போக்குவரத்துச் சங்க நிர்வாகிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு ஒன்றினை நடத்தி இருந்தனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களுக்கான பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து பொதுப் போக்குவரத்து சேவைகளை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாணத்தில் உள்ள டிப்போக்களில் சீர்செய்யப்பட வேண்டிய பிரச்சினைகள் மற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்தோடு அரச பேரூந்துகளும் தனியார் பேரூந்துகளும் இணைந்த நேர அடடவணையின் அடிப்படையில் சேவையில் ஈடுபடுவதில் காணப்படும் சிக்கல்கள் உட்பட பல்வேறு விடயங்களை கலந்துரையாடி இருந்தனர்.

உடனடியாக தீர்க்கக் கூடிய விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பிருடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சரினால் சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button