இலங்கை

தாயின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகன்!

மட்டக்களப்பு, ஏறாவூர் செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் தாயின்கழுத்தை அறுத்து கொலைசெய்த மகனை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றையதினம்(10) நடைபெற்றுள்ளது.

இதில் உயிரிழந்த 65 வயதான தாயின்சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாயை கொலை செய்த 40 வயதான மகன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர்பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button