புதுக்குடியிருப்பு சந்தைக்கு பூட்டு! முல்லையிலும் தொற்று வேகம்!

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு சந்தையில் ஏழு பேருக்கும், முல்லைத்தீவு சந்தையில் ஒருவருக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் ஒருவருமாக 9பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து புதுக்குடியிருப்பு சந்தை மூன்று நாட்களுக்கு பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பலருடன் தொடர்புபட்டு இருப்பதால் மேலும் பலருக்குத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே பொதுமக்கள் நோய்தொற்றை தடுக்க பொதுசந்தைக்கு செல்வதைத் தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவைகள் தவிர, வேறு தேவைகளுக்காக வெளியில் செல்வதைத் தவிர்ப்பதோடு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி வீட்டில் இருக்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு சந்தை உட்பட நகர் பகுதியில் உள்ள வணிக நிலையங்களில் சீட்டு பிடிக்கும் நபர் ஒருவரும் இதற்குள் அடங்குவதோடு அவர் பலருடன் தொடர்பினை பேணியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்தோடு நாளை புதன்கிழமை புதுக் குடியிருப்பு சந்தை வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு மக்கள் செல்வதை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, திட்டமிடல் கிளையில் பணிபுரியும் 20 உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.

இந்தமுடிவின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கபடவுள்ளன.

Exit mobile version