திடீரென மயங்கி வீழ்ந்த நான்கு பொலிஸார்!

திடீரென மயங்கி வீழ்ந்த நான்கு பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் குருணாகல் வாரியபொல பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரால் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வகுப்பு நடாத்தப்பட்ட போது இதில் கலந்து கொண்ட இரு பொலிஸ் அதிகாரிகள் திடீரென மயங்கி விழுந்தனர்.

இதனை அடுத்து மேலும் இரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் இதேபோன்ற சம்பவம் ஏற்பட்டது.

இதனை அடுத்து நான்கு அதிகாரிகளும் சிகிச்சைக்காக வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்களுகு நடத்தப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் நால்வருக்கும் கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியது.

இதனை அடுத்து அங்குள்ள மேலும் பொலிஸாருக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால், அனைவருக்கும் என்டிஜன் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

Exit mobile version