நாடு மீண்டும் முடக்கம், ஒரு சில மணித்தியாலத்தில் முடிவு!

நாடுமுழுதும் கொரோனா தொற்றின் பரவல் அச்சுறுத்தல் காணப்படுகிற போதிலும் நாட்டை முடக்குவதோ அல்லது பயணத்தடையினை அமுல்படுத்துவது தொடர்பில் நிலைமைகளை பொறுத்து ஒரு சில மணித்தியாலத்தில் முடிவுகள் மாறலாம் என பிரதி சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் தொற்றின் பரவல் காணப்படுகிற சூழலில் மேல்மாகாணத்தை முடக்குவது தொடர்பில் மாகாணங்களுக்கு இடையே பயணகட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சுகாதார தரப்பினர் வலியுறுத்தி வருகிற நிலையிலும் கொரோனா கட்டுப்பாட்டு கூட்டத்தில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாதநிலை காணப்படுகிறது.

Exit mobile version