இவர்கள்தான் அதிகளவில் உயிரிழக்கிறார்கள்! இராணுவதளபதி தெரிவிப்பு!

கொரோனா தொற்றால் இப்பொழுது தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழப்பது தெரிய வந்துள்ளதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கையில் வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் ஆபத்தான கட்டத்தில் நாடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்து வரும் ஒருமாத காலம் மிகவும் அவதானமிக்கதாகும். எனவே, அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியினை பெறாதவர்கள் இருந்தால் முடிந்தளவு விரைவில் அதனை பெற்றுகொள்ளுமாறும், 3வது தடுப்பூசி விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனாவால் தற்போது அதிகளவில் உயிரிழப்பவர்கள் 60 வயதுக்கு அதிகமானவர்கள் எனவும் இவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

எனவே முடிந்தளவு வேகமாக மக்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version