இலங்கையாழ்ப்பாணம்

தனிமைபடுத்தப்பட்ட வீட்டில் சேர்ந்து குடித்தவர்களுக்கு நேர்ந்த கதி!

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வீட்டில் நேற்று சனிக்கிழமை இரவு ஒன்றாக சேர்ந்து மது அருந்திய நால்வர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்திற்குட்பட்ட பால்பண்ணை ஞானவைரவர் கோவில் வீதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

குறித்த வீட்டில் இருக்கும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து இருவரும் கோப்பாய் தனிமைப்படுத்தல் மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த வீட்டிற்குள் வைத்து வீட்டின் உரிமையாளர் உட்பட நால்வர் ஒன்றாக சேர்ந்து நேற்றிரவு மது அருந்தியுள்ளனர். அருந்தியது மாத்திரமன்றி பக்கத்து வீட்டினரை அழைத்து சண்டை பிடித்துள்ளனர்.

இதனை அடுத்து கோப்பாய் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தகவலை உறுதிப்படுத்திய பின்னர் இவர்கள் நால்வரையும் அவரவர் வீட்டுக்குள் வைத்து தனிமைபடுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button