இலங்கைகிளிநொச்சியாழ்ப்பாணம்

கர்ப்பமான காதலியை எரித்து கொண்ட காதலன்! யாழில் சம்பவம்!

திருமணம் செய்வதற்கு முன்னர் கர்ப்பமாகிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவரை காதலன், கொலை செய்து எரித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கொலை செய்த நபரை வவுனியா பொலிசார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

சந்தேகநபர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தத்திற்காக சென்றுள்ளார். இதன்போது ​​அப்பகுதியில் உள்ள 19 வயது யுவதியுடன் திருமணத்திற்கு முன் உறவு வைத்திருந்தார்.

இதன் போது அந்தப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இது பெண்ணின் உறவினர்களிற்கு தெரிய வந்ததை அடுத்து, யுவதிக்கு பிரசவமான பின் திருமணம் செய்வதாக கூறி, வவுனியா மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கடந்த 2015 ஓகஸ்ட் 9ஆம் திகதி அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பிரசவமான பின்னர் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின் காதலியையும் கொலை செய்து, உடல்களை தென்னை மட்டை, மண்ணெண்ணெய், சீனியை பயன்படுத்தி எரித்துள்ளார்.

எஞ்சிய பாகங்களை தோட்டத்தில் புதைத்துள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பரமேஸ்வரன் சஜிந்திகா மற்றும் ஆறு மாத குழந்தை ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டனர்..

இவ்வாறு கொலை செய்த 28வயதுடைய நபரை ஆறு வருடங்களுக்கு பின்னர் நேற்று வவுனியா குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 2015 ஓகஸ்ட் முதல் காணாமல் போன யுவதியை காணவில்லை என யுவதியின் உறவினர்கள் கிளிநொச்சியில் உள்ள மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்த நிலையில் இச்சம்பவம் தெரியவந்துள்லது. கொலைக்கு பின்னர் இரு தடவைகள் வெளிநாட்டிற்கு சென்று மீள வவுனியாவுக்குத் திரும்பியதை கொலையாளி விசாரணையின் போது ஒப்புகொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button