கொள்ளையடிக்க போய் ஏடிஎம்மிற்குள் சிக்கிய திருடன்!

ஏடிஎம்மில் திருடுவதற்காக சென்றநபர் ஒருவர் இயந்திரத்திற்குள் சிக்கிகொண்டு போலீசாரிடம் சிக்கிய சம்பவம் ஒன்று சமூகத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டத்தில் அணியாபுரம் பகுதியில் ஒன் இந்தியா ஏடிஎம் செயல்பட்டு வருகிறது.

நேற்று நள்ளிரவு அதனூடாக போலீசார் சென்று கொண்டிருந்த போது ஏடிஎம் அறைக்குள் சத்தம் கேட்டதை அடுத்து போலீசார் அங்குசென்று பார்த்தனர்.

அதன்போது, சுவரோடு வைத்திருந்த ஏடிஎம் இயந்திரத்தினது பின்பக்கத்தை உடைத்து இயந்திரத்தினுள்ளே இறங்கி பணத்தை திருடுவதற்கு முயற்சி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, போலீசார் திருடனை வெளியே வரும்படி சத்தமிட, ஓட முடியாமல், ஏடிஎம் இயந்திரத்திற்குள் இருந்து திருடன் தலைகாட்டினான்.

போலீசார் அந்தநபர் சிக்கிகொண்டதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அத்தோடு வடமாநிலத்தை சேர்ந்த அந்தநபரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதன்பின், நடைபெற்ற விசாரணையில் அந்நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

கோழி தீவன ஆலையில் மூட்டை தூக்கும் இவர், இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் அவ்வவ்போது ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

Exit mobile version