இலங்கை

வீட்டில் சடலமாக மீட்கப்பட்டவருக்கு கொரோனா!

பாணந்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாணந்துறை, வேகட பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 85வயதுடைய மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்த நிலையில் அவ்வீட்டின் உள்ளே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்தமூதாட்டி தனது வீட்டு கதிரை ஒன்றில் விழுந்துகிடந்ததை அவதானித்த அயலவர் பொலிஸாருக்கு கொடுத்த தவலிற்கமைய அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்து சடலத்தை மீட்டு பாணந்துறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் உயிரிழந்த மூதாட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியர்களது வீட்டில் நீண்ட காலமாக சேவையாற்றி வந்தவர் எனவும் குறித்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் எனவும், கடந்த மூன்று நாட்களாக மூதாட்டி தனிமையில் வசித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டியின் சடலத்திற்கு நடாத்தப்பட்ட பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button