வீட்டுக்குள் இருந்து மூன்று சடலங்கள் மீட்பு! வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

குருணாகல் மாவட்டத்திற்குட்பட்ட கல்கமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதில் 28வயதுடைய ஆண் ஒருவரதும் 28வயதுடைய பெண்ணினதும் மற்றும் 10வயது சிறுவனது சடலங்களே இதில் மீட்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை இது தொடர்பாக நடாத்தப்பட்ட விசாரணைகளில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்றிரவு கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக தனது மனைவி மற்றும் 10வயதுடைய மகனை கொலைசெய்து விட்டு கணவன் தானும் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை இன்றைய தினம் கல்கமுவ பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.

Exit mobile version