இலங்கை

பெண்ணை கொலை செய்து உரப்பைக்குள் போட்ட இளைஞன்! மட்டக்களப்பில் சம்பவம்!

பெண் ஒருவரை கொலைசெய்து உரப்பையில் எடுத்துசென்று கடை ஒன்றின் முன்பாக வைத்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வாழைசேனையில் 55வயதுடைய பெண் ஒருவரின் கழுத்தை நொரித்து கொலை செய்துவிட்டு, சடலத்தை உரைப்பையில் போட்டு கட்டி மூட்டையாக சடலத்தை எடுத்துசென்று கடை ஒன்றின் முன் வைத்துவிட்டு சென்ற 28வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (5) இரவு இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் கடைஒன்றை நடாத்தி வருவதாகவும் வாழைசேனை பலநோக்கு கூட்டுறவு சங்க வீதியில் வசித்து வரும் குறித்த பெண்ணுக்கும் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்த நிலையில், நேற்றுஇரவு குறித்த இளைஞன் பெண்ணின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டுள்ளார்.

இதன்போது நடைபெற்ற வாக்குவாதத்தினை அடுத்து குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலைசெய்து உரைப்பையில் உயிரிழந்தவைரை மடக்கி உட்புகுத்தி மூட்டையாக எடுத்துச் சென்று வாழைச்சேனை பொதுச்சந்தை பகுதியில் உள்ள நண்பர் ஒருவரது கடைக்கு முன் மூட்டையை வைத்துள்ளார்.

மூட்டையை வைக்கும் போது “இது இருக்கட்டும் வந்து எடுக்கின்றேன்” என நண்பருக்கு கூறிவிட்டு அங்கிருந்து தப்பிசென்றதாக பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button