இராணூவவீரர் தூக்கிட்டு தற்கொலை!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இராணுவவீரா் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவர் உசிலம்பட்டி அருகே உள்ள கீழதிருமாணிக்கம் பகுதியை சோ்ந்த ராஜாங்கம் மகன் சின்னச்சாமி (வயது27).

முன்னாள் இராணுவ வீரரான இவருக்கும், பெற்றோருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளானர் சின்னச்சாமி.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவுவேளையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனை அறிந்து அங்கு வந்த ராமநாதபுரம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு இது தொடர்பாக விசாரணை செய்தும் வருகின்றனா்.

Exit mobile version