இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி, விளாவோடை வயல்பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனிதஎச்சங்கள் காணப்பட்டுள்ளன.

குறித்த வயல்காணியை சீரமைத்த காணிஉரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கபட்டதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த எச்சங்களை கிளிநொச்சிமாவட்ட நீதிமன்றநீதிபதி பார்வையிட்ட பின் எச்சங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலத்திற்கு உரியவர்கள் யுத்த காலத்தில் உயிரிழந்திருப்பதற்கு வாய்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version