உலகம்

பிரித்தானியா மகாராணிக்கு கொலை மிரட்டல், முக்கிய சூத்தரதாரி பொலிசாரால் சுட்டுகொலை!

பிரித்தானியா மகாராணி 2ம் எலிசபெத்தை கொலைசெய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த இஸ்லாமியநபரை பிரித்தானிய பொலிசார் சுட்டுக்கொலை செய்தனர்..

உலகத்தில் பல அரச குடும்பங்கள் இருந்தாலும் மக்களாட்சி மலர்ந்த பின்பும், தற்போதுவரை அரச குடும்பத்தை மிகமரியாதையாக நடத்துவது பிரித்தானியா அரசுதான், இங்கு நாடாளுமன்று இருந்தாலும், மேல்சபை, கீழ்சபை என இருந்தாலும், மகாராணியான 2ம் எலிசபெத் அந்த மசோதாவில் கையெழுத்திட்டால் மட்டுமே அதுசட்டம் ஆகும்.

அந்தளவிற்கு பிரித்தானியா அரசு அரசகுடும்பத்தை மதிக்கிறது. இதன் காரணமாக மகாராணி 2ம்எலிசபெத் 90வயதை கடந்தபோதும், அவருக்கான பாதுகாப்பு வளையம் இன்னமும் தளர்த்தபடவில்லை.

இந் நிலையில் தற்போது ராணிக்கு கொலைமிரட்டல் விடுத்த ஓர்நபர் பிரித்தானியா பொலிசாரால் கொலைசெய்யப்பட்டார். Sudesh Amman எனும் 20வயது இஸ்லாமிய இளைஞர் கடந்த 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தெற்குலண்டன் பகுதியில் போலிதற்கொலை ஆடைஅணிந்து, அங்கிருந்த இரண்டுபேரை கத்தியால் தாக்கினார்.

இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுடேஸ் ஆமேன் 10 நாட்களுக்கு முன்தான் விடுதலை செய்யப்பட்டார். பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இவரை விடுவிக்கக்கூடாது என உளவுத்துறை எச்சரித்தது.

இருப்பினும், லண்டன் நீதிமன்ற உத்தரவில் விடுதலை செய்யப்பட்டார். வெளியேவந்த சந்தேகநபர் பயங்கரவாத குழுவில் இணையஆர்வம் காட்டியுள்ளார். அது மட்டுமின்றி மகாராணி 2ம் எலிசபெத்தை கொல்லதான் ஆர்வமாக இருப்பதாகவும் இதற்காகதான் மனித வெடிகுண்டாக மாறத் தயார் எனவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து தற்போதுஇவர் பிரித்தானியா சிறப்பு புலனாய்வு பிரிவால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button